சனாதன சர்ச்சை....அமைச்சர் உதயநிதி மீது F.I.R பதிவு..!!
டெங்கு போன்ற சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசிய நிலையில், அவர் மீது உத்திரபிரதேச மாநிலத்தில் F.I.R பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதன சர்ச்சை - வழக்கு பதிவு
தேசிய அரசியலில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் விவகாரம் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் தரப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் உதயநிதி பேசியது தற்போது தேசிய அரசியலில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், அவருக்கு இந்துத்துவ தொடர்புகளுடைய வழக்கறிஞர்கள் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துளள்னர். மேலும், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி, மேலும் அவருடைய தலைக்கு 10 கோடி விலை வைத்துள்ளார்.
மேலும் வழக்குகள்
இந்நிலையில் தான் தற்போது உத்திரபிரதேச மாநில ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு வழக்கறிஞர்கள் அளித்த புகார்களின் பேரில் 2-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் F.I.R பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கர்நாடக மாநில பிரியங் கார்கே மீது வழக்குபதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.