மே 14 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - எந்தெந்த வகுப்புக்கு தெரியுமா?

Tamil nadu
By Thahir May 06, 2022 12:13 PM GMT
Report

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜுன் 13-ந் தேதி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில் அதன் தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கத்தரி வெயிலும் தொடங்கியுள்ளதால் முன் கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.