1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

By Irumporai Apr 29, 2022 04:56 AM GMT
Report

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

அதே சமயம், மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி பாஸ் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும், அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.