1986ம் ஆண்டு பனிமலையில் காணாமல் போன மலையேறுபவர் 2023ல் கண்டுபிடிப்பு - அதிர்ச்சி சம்பவம்!
1986ம் ஆண்டு காணாமல் போன மலையேறுபவரின் உடைமைகள் 2023ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலையேறும் வீரர்
"மேட்டர்ஹார்ன்" உலகில் உள்ள புகழ்பெற்ற பனிமலைகளில் ஒன்றாகும். இது சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையே உள்ள முக்கிய நீர்நிலை மற்றும் எல்லையை கடந்து செல்கிறது.
இந்த மலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு 38 வயதான ஜெர்மானிய மலையேறும் வீரர் ஒருவர் எறியுள்ளார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அப்போது பெரும் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இதனால் அவர் காணாமல் போய்விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
கண்டுபிடிப்பு
இந்நிலையில் இந்த மாத தொ டக்கத்தில் Zermatt க்கு மேலே உள்ள தியோடுல் பனிப்பாறையைக் கடக்கும் மலை ஏறுபவர்கள் பனிக்கட்டியிலிருந்து ஒரு ஹைகிங் பூட் மற்றும் கிராம்பன்கள் போன்ற உடைமைகளை கண்டனர் .
இதனைத் தொடர்ந்து வலைஸ் மாகாணத்தில் உள்ள காவல்துறையினர் இந்த உடைமைகள் DNA பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர். அதில் இந்த உடைமைகள் 1986 ம் ஆண்டு காணாமல் போன மலையேறும் வீரருடையது என்று தெரியவந்துள்ளது.