இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் விடுதலை..!

Srilanka Released Tamilnadu இலங்கை விடுதலை Fishermens தமிழகமீனவர்கள்
By Thahir Apr 18, 2022 05:22 AM GMT
Report

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமநாதபுரம்,புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை மீறி வருவதாக கூறி தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள்,

எல்லை தாண்டி வருவதை இலங்கை கடற்படை கண்காணித்து உடனடி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.இதனால் ஏராளமான தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கடலில் மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தற்போது இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம்,புதுக்கோட்டை,மீனவர்கள் 19 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.