18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருக்கு விண்ணப்பிக்கிறீங்களா? புதிய நடைமுறை அமல்!

Government Of India India Citizenship Aadhaar
By Sumathi Oct 12, 2024 02:30 PM GMT
Report

ஆதார் அட்டை வழங்கப்படுவது தொடர்பான புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும். தற்போது எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி,

aadhar apply procedure

தற்சமயம் தரகர்களின் உதவியுடன் ஆதார் அட்டை வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே, ஆதார் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - மத்திய அரசு

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - மத்திய அரசு

புதிய நடைமுறை

அதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஆதார் கோரி விண்ணப்பித்தால், அவர்களது மனுக்கள் ஆன்லைன் மூலம் யு.ஐ.டி.ஏ.ஐ. ஒருங்கிணைந்த மையத்திற்குச் செல்லும். ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருக்கு விண்ணப்பிக்கிறீங்களா? புதிய நடைமுறை அமல்! | 18 Years Age To Apply For Aadhaar Procedure

அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்த அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவரது தலைமையில் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ.க்கள் உண்மை தன்மையை நேரடியாக களஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும்.

தாசில்தார் ஒப்புதல் அளித்த பின்னரே ஆதார் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.