6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயது இளைஞர் - கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்!

Attempted Murder Sexual harassment Dharmapuri
By Vinothini Jul 19, 2023 08:17 AM GMT
Report

 தர்மபுரியில் 6 வயது சிறுவனை உறவினர் ஒருவர் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன சிறுவன்

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார். இவருக்கு 6 வயதில் மதியரசு என்ற மகன் உள்ளார். இவர் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றுள்ளார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை, அதிர்ச்சியில் பெற்றோர் தேடினர். அனால் எங்கு தேடியும் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர். அப்பொழுது அதே பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அந்த சிறுவனின் உறவினர் 18 வயதான பிரகாஷ் என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து தொட்டியில் வீசி சென்றுள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.