18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

transfer tamilnadu iasofficer
By Irumporai Jun 16, 2021 11:42 AM GMT
Report

தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையராகவும், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மை செயலாளராக விபு நாயர், சமூக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கமல்கிஷோரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஆகியோரை நியமனம் செய்து உத்தரடவிட்டுள்ளனர்.