‘தம்பி யாருப்பா நீ’..நாயை காவலுக்கு நிறுத்திவிட்டு கடையில் புகுந்து பணம் திருடும் சிறுவன்

Viral Video
By Swetha Subash Apr 29, 2022 06:18 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

உளுந்தூர்பேட்டையில் நாயை காவலுக்கு வைத்துவிட்டு 15 வயது சிறுவன் காய்கறி கடைக்குள் புகுந்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணை நல்லூர் சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் ராஜா என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்தபின் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்து பார்த்த பொழுது கடையில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததுள்ளது.

அதிர்ச்சி அடைந்த ராஜா பணப் பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த ரூபாய் 5 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளதை அறிந்தார்.

‘தம்பி யாருப்பா நீ’..நாயை காவலுக்கு நிறுத்திவிட்டு கடையில் புகுந்து பணம் திருடும் சிறுவன் | 15 Yo Puts Dog For Guard Steals Money From Shop

இதை தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை பார்த்தபோது நள்ளிரவு 12-மணியளவில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னுடன் வந்த நாயை கடையின் வெளியே காவலுக்கு நிறுத்தி விட்டு கடைக்குள் புகுந்து பணப் பெட்டியில் இருந்த ரூபாய் 5000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

‘தம்பி யாருப்பா நீ’..நாயை காவலுக்கு நிறுத்திவிட்டு கடையில் புகுந்து பணம் திருடும் சிறுவன் | 15 Yo Puts Dog For Guard Steals Money From Shop

இது குறித்து ராஜா சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் நகராட்சி வணிக வளாகத்தின் வெளியே நாயை காவலுக்கு வைத்துவிட்டு சிறுவன் கடைக்குள் புகுந்து திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.