மனநலம் பாதித்த பெண்ணை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் - பரபரப்பு சம்பவம்
ஹரியானா மாநிலம், பஞ்சகுலாயைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் மனநலம் பாதித்தவர். இவரை தனியாக வீட்டில் விட்டுவிட்டு தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வது வழக்கம்.
இதை நெடு நாட்களாக நோட்டமிட்டு வந்த இளைஞர் ஒருவர் தம்பதிகள் இருவரும் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக, கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூரச் செயலை செய்து விட்டு அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டான்.
8 வாரங்கள் கழித்து பெண்ணுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, மருத்துவமனையில் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் மகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பெண்ணை யார் கர்ப்பமடைய வைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.