சிறுவன் உள்ளிட்ட 15 தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Vavuniya Tamil nadu Sri Lanka
By Thahir Nov 17, 2022 07:32 AM GMT
Report

சிறுவன் உள்ளிட்ட 15 மீனவர்களை கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் விடுதலை 

அண்மை காலமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை நாட்டு கடற்படையினர் கைது நடவடிகைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி கச்சத்தீவு அருகே 14 வயது சிறுவன் உட்பட 15 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

15 Tamil Nadu fishermen including boy released

இதையடுத்து வவுனியா சிறையில் உள்ள சிறுவன் உள்ளிட்ட 15 மீனவர்களை , இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.