பாலம் கட்டுமான பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் - உடைந்து விழுந்த கிரேன்..15 பேர் உயிரிழப்பு..!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நேற்று இரவு நடந்த பாலம் கட்டுமான பணியின் போது கிரேன் உடைந்து விழுந்து 15 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஷாபூர் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
6 பேரை தேடும் பணி தீவிரம்
மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதேசமயம் இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.