சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை விதிப்பு
cuddalore
144inchidambaram
144intn
chidambaramkanagasaba
By Swetha Subash
சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
இதனால் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.