ஓரினச்சேர்க்கையில் 13 வயது சிறுவனை கொலை செய்த குற்றவாளி படுகொலை - வெளியான திடுக்கிடும் தகவல்

murder homosexuality guilty பாலியல்வன்கொடுமை 13-year-old-boy 13வயதுசிறுவன் 3peoplearrest குற்றவாளிபடுகொலை 3பேர்கைது
By Nandhini Apr 11, 2022 08:06 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைமணியின் மகன் அபினேஷ்.

கடந்த 2020ம் ஆண்டு அபினேஷ், 13 வயது சிறுவன் தேவன்ராஜ் என்பவனை ஓரினச்சேர்க்கை செய்ய கட்டாயப்படுத்தி கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் அபினேஷை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவன்ராஜை தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த ரீனேஷ் என்ற சிறுவனையும் ஓரின சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அபினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த அபினேஷ், கோட்டகுப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அபினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான வாலிபர்கள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் -

சிறையிலிருந்து வெளியே வந்த அபினேஷ் கோட்டகுப்பத்தில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது, வீட்டின் மேல்தளத்தில் வசித்த மீனவர் வின்னரசன் என்பவரது 7 வயது மகனுக்கு மீண்டும் செக்ஸ் தொல்லை கொடுத்தான்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவனின் சித்தப்பா கலையரசன், கடந்த 4ம் தேதி அபினேஷிடம் சண்டையிட்டு தட்டிக்கேட்டு மிரட்டினார். ஆனால், மறுநாள் 5ம் தேதி சோலை நகர் கடலில் மர்மமான முறையில் கலையரசன் இறந்து கிடந்தார்.

அபினேஷ் தான் கொலை செய்திரக்க வேண்டும் என்று ஊர்மக்கள் சந்தேகப்பட்டனர். இதனால், எங்களுக்கு கோபம் வந்தது.

வின்னரசனின் உறவினர் சத்தீஷ் தனது நண்பர்கள் அப்பு, அஜீத் ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து, கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பில் அபினேஷை மடக்கி குத்தி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறினர்.

இதனையடுத்து சத்தீஷ், அஜீத் ராஜ், அகமது அசேன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.