13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. இந்த மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசியில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர் , தேனி, கரூர் , நாமக்கல் உள்ளிட்ட
மொத்தமாக `13 மாவட்டங்களில் இந்த கனமழை இருக்கும் எனவும், இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.