I.N.D.I.A கூட்டணி....ஒருங்கிணைப்பாளர் முக ஸ்டாலின்...13 பேர் கொண்ட குழு அமைப்பு
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலினும் இடம்பெற்றுள்ளார்.
I.N.D.I.A கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இணைந்து மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதில் மேலும் 23 கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் இன்று மும்பையிலும் நடைபெற்றுள்ளது. இதில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
13 பேர் கொண்ட இந்த குழுவில் கே.சி.வேணுகோபால்(காங்கிரஸ்), சரத் பவார்(தேசியவாத காங்கிரஸ்), முக ஸ்டாலின்(திமுக), சஞ்சய் ராவத்(சிவசேனா), தேஜஸ்வி யாதவ்(ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி(திரிணாமுல் காங்கிரஸ்), ராகவ் சத்தா(ஆம் ஆத்மி), ஜாதவ் அலி கான்(சமாஜ்வாதி), லாலன் சிங்(ஜனதா தளம்(யுனைடெட்)), ஹேமந்த சோரன்(ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), டி.ராஜா(கம்யூனிஸ்ட் பார்ட்டி (இந்தியா)) உமர் அப்துல்லா(ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி) மற்றும் மெகபூபா முப்தி(ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி) போன்றோர் இடம்பெற்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது.