பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!

eps anbil magesh 12th exam
By Anupriyamkumaresan Jun 05, 2021 07:03 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தலாமா என எடப்பாடி பழனிசாமியிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து கேட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..! | 12Th Exam Minister Anbilmagesh Discuss With Eps

இதனால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மாநிலங்களிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்துக் கேட்டிருந்தது .

பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..! | 12Th Exam Minister Anbilmagesh Discuss With Eps

இதில் 60% பேர் தேர்வு நடத்தலாம் என்ற கருத்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் +2 தேர்வு தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்திருக்கிறார்.