13 கட்சிப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 13 கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதில், அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வேல்முருகன், பாலாஜி, செல்வப்பெருந்தகை, சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா, ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த பாஜக சார்பில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பில் 60% பேர் தேர்வை நடத்தலாம் என கூறியிருந்தனர்.அதன் அடிப்படையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கல்வியாளர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனையின் அடிப்படையிலும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக் கேட்பின் அடிப்படையிலும் தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பதை தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமியிடமும் அன்பில் மகேஷ் கருத்து கேட்டுள்ளார்.