12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
.
தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ம் அலை வேகமாக பரவி வருவதாலும் தடுப்புச்சி போட்டு மாணவர்களை வர சொல்லவது தொற்றை அதிகரிக்கலாம் .
ஆகவே பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளி கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை வகுக்கு குழுவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் இருப்பார்கள்
அவர்கள் மதிப்பெண் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.