சபரிமலை கோவிலுக்குச் சென்ற 12 வயது சிறுமி மரணம் - என்ன நடந்தது?

Kerala Death Sabarimala
By Sumathi Dec 11, 2023 07:23 AM GMT
Report

சபரிமலை செல்லும் வழியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் வருகை

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

sabarimala

அந்தவகையில் சேலத்தினை சேர்ந்த 12 வயது பத்மஸ்ரீ என்ற சிறுமி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த் குழுவினரோடு சபரி மலைக்கு சென்றுள்ளார்.

"சபரிமலை அரவணையில் பூச்சிமருந்து கலந்த ஏலக்காய்"!! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

"சபரிமலை அரவணையில் பூச்சிமருந்து கலந்த ஏலக்காய்"!! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

சிறுமி உயிரிழப்பு

அப்போது கோயிலுக்கு செல்லும் வழியான அப்பாசிமேடு என்ற பகுதியில் தீடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே, சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

சபரிமலை கோவிலுக்குச் சென்ற 12 வயது சிறுமி மரணம் - என்ன நடந்தது? | 12 Year Old Girl Dies At Sabarimala

மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விசாரித்ததில் இவருக்கு 3 வயதில் இருந்தே இதய நோய் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

அதே சமயம் சபரிமலையில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், நெரிசல் காரணமாக குழந்தை இறந்ததா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.