கேல் ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு : யார் யார் தெரியுமா ?
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் , இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா உட்பட 11 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தயான் சந்த் விருது கொடுத்து கவுரவிக்க பரிந்துரைத்துள்ளது.
தேசிய விளையாட்டு விருதுகள் குழு. அதேபோல 35 தடகள வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தற்போது தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் :
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது - 2021
1. நீரஜ் சோப்ரா (தடகளம்)
2. ரவிக்குமார் (மல்யுத்தம்)
3. லவ்லினா (குத்துச்சண்டை)
4. ஸ்ரீஜேஷ் (ஹாக்கி) பாரா ஒலிம்பிக் வீரர்கள் பட்டியல்:
5. அவானி லெக்ரா
6. சுமித் ஆன்டில்
7. பிரமோத் பகத்
8. கிருஷ்ணா நகர்
9. மணீஷ் நர்வால் Khel ratna award declared
10. மிதாலி ராஜ்
11. சுனில் சேத்ரி
12. மன்பிரீத் சிங்
இதே போன்று, தேசிய விளையாட்டு விருதுகள் குழுவானது 35 வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவதாகவும் அறிவித்து அவர்களது பெயர் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது