ஏர்போர்ட்டே ஆடிப்போனது.. ஒரே விமானத்தில் கூண்டோடு சிக்கிய 113 கடத்தல்காரர்கள் - அதிர்ச்சி!

Chennai Gold smuggling Flight
By Vinothini Sep 15, 2023 05:04 AM GMT
Report

விமான நிலையத்தில் வந்த 113 கடத்தல்காரர்கள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய தகவல்

ஓமன் நாட்டில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள், வெளிநாட்டு சிகரெட்களை நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

113-gold-smugglers-in-chennai-airport

இதனால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்பொழுது சம்மந்தப்பட்ட விமானத்தில் 186 பயணிகள் வந்து இறங்கினர், அதிகாரிகள் விசாரணையில் இதில் 73 பேர் கடத்தலில் ஈடுபடாதவர்கள் என்று தெரியவந்தது.

கடத்தல் கும்பல்

இந்நிலையில், அதிகாரிகள் அனைவரையும் சோதனை செய்ததில் 113 பேர் கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவர்களின் உடைகளை களைந்து சோதனையிட்டபோது, தங்களது உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப்பசைகள் என பல விதமாக தங்கத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது. அவர்களது சூட்கேஸ், பைகளை சோதனையிட்டதில், நிறைய ரகசிய அறைகள் இருந்தன.

113-gold-smugglers-in-chennai-airport

அவற்றில் 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்புகள் என மறைத்து வைத்திருந்தனர். இதில் தங்கம் மட்டும், மொத்தம் 13 கிலோ இருந்ததாக தெரிகிறது. இந்த மொத்த பொருட்களின் மொத்த மதிப்பு 14 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. அந்த 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, அவர்களை ஜாமீனிலும் விடுவித்தனர்.

113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் என்பது உறுதியானது, மேலும், இந்த கும்பலின் முக்கிய தலைவர் யார் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.