தூக்கில் தொங்குவது போல் ஒத்திகை பார்த்த சிறுவன் பரிதாப மரணம்..
உத்தரப்பிரதேசத்தில் தூக்கிலிடப்படுவதுபோன்ற காட்சியில் நடித்த 10 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் புதான் நகரில் குன்வர்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட பாபட் கிராமத்தில் வசித்து வரும் பூரே சிங்கின் மகன் சிவம் சுதந்திர தின விழா நாடகத்திற்கான ஒத்திகையின் போது, சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்படுவதுபோன்ற காட்சியில் நடித்துள்ளார்.
அப்போது அவர் நின்றிருந்த ஸ்டூல் நழுவி அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சக குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் சிவம் உடலை தூக்கு கயிற்றில் இருந்து மீட்டனர்.
உடலை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.