பத்தாம் வகுப்பு முதல் நாள் தேர்வில் 42 ஆயிரம் பேர் ஆப்சென்ட்..வெளியான அதிர்ச்சி தகவல்..!
Tamil nadu
By Thahir
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் நாளில் 42 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பிளஸ் டூ தேர்வு தொடங்கிய நிலையில் மொழிப்பாட தேர்வில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8,37,317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்,
இன்று தொடங்கி நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தேர்வில் 42,000 மாணவர்கள் ஆப்சென்ட் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் தேர்வெழுத மொத்தம் 9,55,139 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 42,024 பேர் இன்று நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.