தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது..!

Tamil nadu
By Thahir May 06, 2022 04:56 AM GMT
Report

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில் தொடங்கியது. இங்கு மொத்தம் 9.

55 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 7,712 மாற்றுத்திறனாளி, தனித்தேர்வர், சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் தேர்தவில் முதல் 15 நிமிடம் மாணவர்கள் வினாத்தாளை படித்துபார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது