1000 ரூபாய் வெறும் சொற்ப காசே....சீமான் குற்றச்சாட்டு..!!
இன்று துவங்கப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை குறித்து நாம் தமிழர் சீமான் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை திட்டம்
திமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியான "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கின்றார். இதற்காக பெறப்பட்ட 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு பல விதமான கருத்துக்கள் இருக்கும் நிலையில், தற்போது நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு
சென்னை அயனவராத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா சுதந்திரம் பெற்று இதனை ஆண்டுகள் ஆகிய நிலையிலும் தற்போது வரை மக்களை 1000 ரூபாய்க்கு கையேந்தும் நிலையில் தான் இந்த கட்சிகள் வைத்துள்ளது என குற்றம்சாட்டினார்.
இது வெறும் சொற்ப பணமே என்றும் தமிழகத்தில் 9 லட்ச கோடி கடன் இருக்கும் நிலையில், எங்கிருந்து இந்த பணம் வந்தது என கேள்வி எழுப்பிய சீமான், விலைவாசி உயர்வு குறித்து எந்த வித கவலையும் மாநில அரசிற்கு இல்லை என குற்றம்சாட்டினார்.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
