100வது வயசுல திருமணம் செய்த தாத்தா - பேரன், பேத்திகள் வாழ்த்து - நெகிழ்ச்சி சம்பவம்
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிஸ்வானந்த் சாகர். இவருக்கு நேற்று 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இவருடைய பிறந்த நாளுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் ஒன்று கூடினர். அப்போது, தனது 100-வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட ஆசைப்பட்டார் முதியவர்.
இதனையடுத்து தன்னுடைய அன்பு மனைவியை பிறந்தநாளில் மீண்டும் திருமணம் செய்துகொண்டுடார். தன்னுடைய மனைவிக்கு, மாலை அணிவித்து மீண்டும் தாலி கட்டி பொட்டு வைத்த போது, அருகில் நின்றுக்கொண்டிருந்த மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சி வந்திருந்தவர்கள் அனைவரும் தாத்தா, பாட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களின் திருமணம் முதியவர் வீட்டில் மிக எளிமையாக, சிறப்பாக நடந்து முடிந்தது.
தற்போது இந்தச் செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள், தாத்தா, பாட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.