நடுவர் வழங்கிய சர்ச்சை முடிவு - ரசிகர்களின் மோதலில் 100 பேர் பலி

Football Death World
By Karthikraja Dec 02, 2024 08:30 AM GMT
Report

நடுவரின் சர்ச்சை முடிவால் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கால்பந்து போட்டி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா(Guinea) நாட்டில் ஆட்சியை கைப்பற்றி தன்னை அதிபராக நியமித்து கொண்டவர் மாமடி டூம்பூயா. 

Guinea leader mamady doumbouy

2025 ஆம் ஆண்டு கினியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாமடி டூம்பூயாவிற்கு ஆதரவு திரட்ட அவரது சார்பில் நேற்று(01.12.2024) N'Zerekore நகரில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

100 பேர் பலி

இதில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் இரு அணிகளின் ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. மைதானத்தில் புகுந்து கடுமையாக மோதிக்கொண்டனர். 

Guinea football

இந்த மோதல் வன்முறையாக வெடித்து இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காயமடைந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனை முழுவதும் சடலங்களால் நிரம்பியுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.