10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
By Fathima
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.
மொத்தமாக 8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதியிருந்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
1931 அரசுப்பள்ளிகளும், 5170 தனியார் பள்ளிகளும் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன.
தமிழ் பாடத்தில் 34, ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 3194, அறிவியலில் 10476 மற்றும் சமூக அறிவியலில் 3,336 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.