இலங்கை தமிழர்கள் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை

Sri Lanka Refugees Sri Lanka
By Thahir Nov 23, 2022 06:54 AM GMT
Report

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் 10 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

10 பேர் அகதிகளாக வருகை 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு வேளை உணவுக்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை | 10 Sri Lankan Arrive In Dhanushkodi As Refugees

இதனால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். அந்த வகையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து 10 பேர் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருகை புரிந்துள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.