தொடரும் சர்ச்சை....அமைச்சர் உதயநிதியை அறைந்தால் 10 லட்சம்..!!
சனாதன விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கும் நிலையில், விஜயவாடாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அறைந்தால் 10 லட்சம் அளிக்கப்படும் என அடைக்கப்பட்டுள்ள போஸ்டர்களில் பரபரப்பு.
உதயநிதி - சனாதன சர்ச்சை
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
தேசிய அரசியலில் இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் இதற்கு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
தலைக்கு 10 கோடி
இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி இழிவாக பேசியதாக காரணம் காட்டி அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவரின் அவரது தலைக்கு பணம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
உத்திரபிரதேச மாநில அயோத்தியை சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவரை உதயநிதி படத்தை வாளால் தீயிட்டு கொளுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோடு நில்லாமல் அவர், தொடர்ந்து உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்திருந்தார்.
அறைந்தால் 10 லட்சம்
இதனை தொடர்நது இன்று அறிக்கை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி தோழர்கள் சாமியாரின் புகைப்படத்தை எரித்து நேரத்தை வீணடிக்காமல், கட்சி பணியில் ஈடுபடும் படியும், வரும் வழக்குகளை தான் சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுருந்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தற்போது அமைச்சர் உதயநிதியை அறைந்தால், அறைபவருக்கு 10 லட்ச ரூபாய் அளிக்கப்படும் என போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Posters announcing a cash reward of Rs 10 lakh rupees for those who slap #Tamilnadu minister #UdhayanidhiStalin in Vijayawada. #AndhraPradesh #SanatanaDharma pic.twitter.com/QvyJ7Njd2n
— Ashish (@KP_Aashish) September 7, 2023