மாணவர் சேர்க்கை இல்லாததன் எதிரொலி : தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்!

Anna University
By Swetha Subash May 23, 2022 08:44 AM GMT
Swetha Subash

Swetha Subash

in கல்வி
Report

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு சுமார் 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பதால் அந்த கல்லூரிகள் வரும் கல்வியாண்டு முதல் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை இல்லாததன் எதிரொலி : தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்! | 10 Engineering College Under Anna University Close

போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால்,வருகின்ற கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தவில்லை என்று கூறி தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 494 தனியார் கல்லூரிகளில் தற்போது 10 கல்லூரிகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.