கோவில் திருவிழாவில் ‘நிர்வாண’ நடன நிகழ்ச்சி : இணையத்தை வட்டமடிக்கும் வைரல் வீடியோ : 10 பேரை கொத்தாக தூக்கிய காவல் துறை
கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விவகாரத்தில் 10 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது ஆந்திரா காவல் துறை.
ஆந்திர பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளரேவு மண்டலத்திற்கு உட்பட்ட உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா கடந்த 14-ந்தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று அதிகாலை வரை நடைபெற்ற இந்த திருவிழாவில் கிராமத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்சியை எற்படுத்தியுள்ளது. இது பற்றிய வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதனை அறிந்த கொரிங்கா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில், கடந்த 14-ந்தேதி நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 3 மணிக்கு இடையில் இந்த நடனம் அரங்கேறியுள்ளது தெரிய வந்திருக்கிறது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, “இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்” என தெரிவித்தனர்.