துபாய் ஏர்போர்ட் போறீங்களா? அப்போ சிறை தண்டனை உறுதி - பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Dubai United States of America World
By Jiyath Oct 04, 2023 06:44 AM GMT
Report

அமெரிக்க பெண்ணிற்கு துபாய் விமான நிலையத்தில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விமான நிலையம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் எலிசபெத் (21). தந்தையை இழந்த எலிசபெத் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தனது தோழியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

துபாய் ஏர்போர்ட் போறீங்களா? அப்போ சிறை தண்டனை உறுதி - பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! | 1 Year Prison For American Women At Dubai Airport

இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட எலிசபெத் மற்றும் அவரின் தோழி இருவரும் பயணத்தை முடித்துவிட்டு துபாய் வழியாக நியூயார்க் செல்ல திட்டமிட்டனர். மாற்று விமானத்திற்காக துபாய் விமான நிலையத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது . அறுவை சிகிச்சையின் காரணமாக வலி குறைவதற்கு எலிசபெத் இடுப்பில் பெல்ட் ஒன்றை அணிந்திருந்தார்.

அப்போது விமான நிலைய காவலாளி ஒருவர் எலிசபெத்திடம் பெல்ட்டை அகற்ற வலியுறுத்தியுள்ளார். தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, வலிக்காக அதனை அணிந்துள்ளேன் என்று எலிசபெத் அவர்களிடம் கூறியுள்ளார். அதனை கண்டுகொள்ளாத ஊழியர்கள் பெல்ட்டை அகற்ற சொல்லியுள்ளனர்.

சிறை தண்டனை

இதனால் எலிசபெத் ஓய்வறைக்கு சென்று கடும் வலியுடன் பெல்ட்டை கழற்றியுள்ளார். இதனையடுத்து கடும் வலி ஏற்பட்டதால் எலிசபெத், தன்னை தோழியிடம் கொண்டு சென்று விடுமாறு கூறி, அங்கிருந்த பெண் காவலாளி ஒருவரின் கையை பிடித்துள்ளார்.

துபாய் ஏர்போர்ட் போறீங்களா? அப்போ சிறை தண்டனை உறுதி - பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! | 1 Year Prison For American Women At Dubai Airport

இதனால் கோபமடைந்த பெண் காவலாளி தன்னை தாக்கி, அவமானப்படுத்தியதாக எலிசபெத் மீது புகார் அளித்தார். பின்னர் அது வழக்குப்பதிவாக மாறியுள்ளது. இதனால் எலிசபெத்தின் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டு, 10 ஆயிரம் திர்ஹம்(இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.25 லட்சம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓராண்டு சிறை தண்டனையும் எலிசபெத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.